seeyonil irundhu israveluku சீயோனில் இருந்து இஸ்ரவேலுக்கு
சீயோனில் இருந்து இஸ்ரவேலுக்கு
ரட்சிப்பு வந்ததே
தேவன் தம்முடைய ஜனத்தின் சிறையிருப்பை
மீண்டும் திருப்பினாரே
எனவே களிப்போம் மகிழ்வோம்
உன்னத தேவனில்
ஆர்ப்பரித்துக் கொண்டாடிடுவோம்
1. பார்வோனின் சேனைகளைக் காணவில்லையே
செங்கடலில் அழிந்ததே
தேவன் தம்முடய ஜனத்தை நடத்தினாரே
உலர்ந்த ஆழியின் நடுவிலே – எனவே
2. முன்னின்ற யோர்தானும் பின்னிட்டதே
தேவனின் புயத்தாலே
இஸ்ரவேலின் ஜெயபலமானவரே
தண்ணீரைத் தரையாய்
மாற்றினாரே – எனவே
3. நம்பிக்கையுடைய சிறைகளே
அரணுக்குத் திரும்புங்களேன்
இரட்டிப்பான நன்மைகளை தருவாரே
இன்றைக்கு தந்திடுவாரே – எனவே