karthaave um saththam kaetida seiyum கர்த்தாவே உம் சத்தம் கேட்டிடச் செய்யும்
கர்த்தாவே உம் சத்தம் கேட்டிடச் செய்யும்
உம் அடியேன் கேட்க்கிறேன்
உம் வார்த்தையை கற்று தாரும், அதில்
உம்மோடு நான் நடக்க
உம் வார்த்தை படித்து, உம் சத்தம் கேட்டு
என்னை சரி செய்து கொள்வேன்
உம்முடைய வழியில் நடக்க எனக்கு
எப்பொழுதும் கற்றுத் தாரும்
பேசிடும் தேவா ஓவ்வொரு நாளும்
உம் சத்தம் நான் கேட்க்கவே
உமக்காக வாழ உம் சித்தம் செய்ய
உம் கையில் என்னை தந்தேன்