yarum kanna un ninthanaigal யாரும் காணா உன் நிந்தனைகள்
யாரும் காணா உன் நிந்தனைகள்
என் கண்கள் மட்டும் கண்டதே
உடைக்கப்பட்ட பாத்திரம் நீ
குயவன் கரம் உன்னை தேடுதே
என் பிரியமே என் சொந்தமே
உன் நிலைமையை நான் மாற்றுவேன்
நானே உந்தன் தேவன் அல்லோ
உன்னை நான் அறிந்திருக்கிறேன்
உன்னை எந்தன் உள்ளங்கரத்தில்
ஆழமாய் பதித்திருக்கிறேன்
நீ இருக்கும்போல் உன்னை ஏற்றுக்கொண்டு
உன் பாரங்கள் நான் சுமக்கிறேன்
உன் கண்ணீரே என் நினைவில் கொண்டு
உன் சார்பில் நான் வழக்காடுவேன்
சாம்பலை சிங்காரமாய்
உன் அழுகையை களிப்பாக்குவேன்
நானே உந்தன் தேவன் அல்லோ
உன்னை நான் அறிந்திருக்கிறேன்
உன்னை எந்தன் உள்ளங்கரத்தில்
ஆழமாய் பதித்திருக்கிறேன்
யார் மறந்தாலும்
நான் மறவேனோ
உறவுகள் பிரிந்தாலும்
நான் பிரிவேனோ
நானே உந்தன் தேவன் அல்லோ
உன்னை நான் அறிந்திருக்கிறேன்
உன்னை எந்தன் உள்ளங்கரத்தில்
ஆழமாய் பதித்திருக்கிறேன்