en yesu balan pirantharae என் இயேசு பாலன் பிறந்தாரே
என் இயேசு பாலன் பிறந்தாரே எழிலோடு கண்கள் திறந்தாரேபனி தூவும் நள்ளிரவுக் குளிரில் மனு தேவன் மண்ணில் மலர்ந்தாரே - 2இருள் தின்ற இரவில் ஓர் ஒளிமின்னல் அருள் சிந்தும் கண்கள் இரு விண் மீன்கள் - 2உற்றாரும் உறவொன்றும் இல்லாத பெத்தலையில் உன்னதரும் துள்ளி அசைந்தாரே - 2முன்னணையில் வைகோலே பஞ்சனையோ !குளிர்வாடை பாடியது தாலேலோ ! - 2மாடடையும் தொழுவத்தில் மண்ணுலகின் மன்னவரே சிசுவாக மேய்ப்பன் வந்தாரே - 2கண் மின்னி பொன் வெள்ளி திசை காட்ட மூவரசர் தேடிவந்து பதம் நாட - 2ஆட்டிடையர் சிறுகூட்டம் ஆவலுடன் துதிபாட ஆனந்த அற்புதர் வந்தாரே - 2