• waytochurch.com logo
Song # 1680

குருசினில் தொங்கியே





குருசினில் தொங்கியே

பல்லவி

குருசினில் தொங்கியே குருதியும் வடிய

கொல்கதா மலைதனிலே - நம்

குருவேசு சுவாமி கொடுந் துயர் பாவி,

கொள்ளாய் கண் கொண்டு




சரணங்கள்

1. சிரசினில் முண்முடி உறுத்திட, அறைந்தே

சிலுவையில் சேர்த்தையோ! - தீயர்

திருக்கரங் கால்களில் ஆணிகளடித்தார்,

சேனைத்திரள் சூழ --- குருசினில்




2. பாதகர் நடுவில் பாவியினேசன்

பாதகன் போல் தொங்க - யூத

பாதகர் பரிகாசங்கள் பண்ணிப்

படுத்திய கொடுமைதனை --- குருசினில்




3. சந்திர சூரிய சசல வான் சேனைகள்

சகியாமல், நாணுதையோ! - தேவ

சுந்தர மைந்த னுயிர் விடுகாட்சியால்

துடிக்கா நெஞ்சுண்டோ? -- குருசினில்




4. ஈட்டியால் சேவகன் எட்டியே குத்த

இறைவன் விலாவதிலே - அவர்

தீட்டிய திட்சைக் குருதியும் ஜலமும்

திறந்தூறோடுது பார் --- குருசினில்




5. எருசலேம் மாதே, மறுகி நீயழுது

ஏங்கிப் புலம்பலையோ? - நின்

எருசலையதிபன் இள மணவாளன்

எடுத்த கோல மிதோ? --- குருசினில்

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com