• waytochurch.com logo
Song # 14884

en manathu thudikkuthu என் மனது துடிக்குது


என் மனது துடிக்குது
குலை பதைத்து நோகும்
தெய்வ மைந்தனின் சவம்
கல்லறைக்குப் போகும்

ஆ அவரே மரத்திலே
அறையப்பட்டிறந்தார்
கர்த்தர்தாமே பாவியின்
சாபத்தைச் சுமந்தார்

என் பாவத்தால் என் தீங்கினால்
இக்கேடுண்டாயிருக்கும்
ஆகையால் என்னுள்ளத்தில்
தத்தளிப்பெடுக்கும்

என் ஆண்டவர் என் ரட்சகர்
வதைந்த மேனியாக
ரத்தமாய்க் கிடக்கிறார்
என் ரட்சிப்புக்காக

வெட்டுண்டோரே ஆ உம்மையே
பணிந்தென் ஆவி பேணும்
ஆகிலும் என் நிமித்தம்
நான் புலம்பவேணும்

குற்றமற்ற கர்த்தாவுட
அனலாம் ரத்தம் ஊறும்
மனஸ்தாபமின்றி ஆர்
அதைப் பார்க்கக்கூடும்

ஆ இயேசுவே என் ஜீவனே
நீர் கல்லறைக்குள்ளாக
வைக்கப்பட்டதைத் தினம்
நான் சிந்திப்பேனாக

நான் மிகவும் எந்நேரமும்
என் மரணநாள் மட்டும்
என் கதியாம் இயேசுவே
உம்மை வாஞ்சிக்கட்டும்

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com